Categories
உலக செய்திகள்

வந்தே பாரத் திட்டத்தில்…. 70 லட்சம் இந்திய மக்களை மீட்டுள்ளோம்… ஜெய் சங்கர் பேச்சு…!!!

மத்திய வெளிவிவகாரங்களுக்கான மந்திரியான ஜெய்சங்கர், வந்தே பாரத் திட்டப்படி உலகில் மொத்தமாக 70 லட்சம் மக்களை இந்தியாவிற்கு வரவழைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

மத்திய வெளிவகார மந்திரியான ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்றிருக்கிறார். அங்கு சென்ற அவர் ரியாத் நகரத்தை சேர்ந்த இந்திய சமூக மக்களிடையே நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உலக நாடுகளிலிருந்து மொத்தமாக சுமார் 70 லட்சம் மக்களை, வந்தே பாரத் திட்டப்படி இந்திய நாட்டிற்கு வரவைத்திருக்கிறோம்.

இவ்வாறு வேறு எவரும் செய்தது கிடையாது. கொரோனா பரவல், உலகம் முழுக்க பரவி பாதிப்புகளை உண்டாக்கிய நேரத்தில், பிற நாடுகளில் இருக்கும் மக்களை இந்தியாவிற்கு அழைக்க மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை அது. அது தான் இந்தியா. உலகம் அதனை பார்க்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |