தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி விலங்குகள் நல வாரிய ஆலோசகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் பகுதியில் விலங்குகள் நலவாரிய ஆலோசகர் மயூர் ஹசிஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூடல் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருந்ததாவது “கூடல்நகர் ரயில்வே நகர் 2வது தெருவில் ஏழு தெருநாய்கள் செத்துக் கிடக்கிறது.
ஒரே நேரத்தில் நாய்கள் அனைத்தும் செத்து கிடப்பதால் யாரேனும் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்திருக்கலாம் என தெரியவருகிறது. எனவே நாய்களை கொலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.