Categories
உலக செய்திகள்

“ஹாங்காங்கில் அதிகரித்த காட்டுப்பன்றிகள் அட்டகாசம்!”.. விஷஊசி செலுத்திய அதிகாரிகள்..!!

ஹாங்காங்கில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வந்ததால், அதிகாரிகள் ஏழு பன்றிகளை விஷ ஊசி செலுத்தி கொன்றுள்ளனர்.

ஹாங்காங்கில், மக்கள் காட்டு பன்றிகளுக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள். இதனால், நகரப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த வாரத்தில், காவல்துறை அதிகாரி ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியுள்ளது.

எனவே, காட்டு பன்றிகளுக்கு உணவு கொடுத்தால் அதிகமான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதிகாரிகள் விஷ ஊசி செலுத்தி 7 பன்றிகளை கொன்றதற்கு, விலங்கு நல ஆர்வலர்கள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Categories

Tech |