Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் இருக்கும் மார்க்கெட் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக நயினார், லட்சுமணன், கண்ணன், மூர்த்தி, மகாலிங்கம், குமார், மதன் போன்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 9 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |