Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வஹாப் ரியாஸ், ஃபகர் ஜமான், இம்ரான் கான், முகமது ஹபீஸ், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியாகியுள்ளது. பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்த மூன்று வீரர்களுக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சுய தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மேலும் 7 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |