மருத்துவ படிப்பில் 7.5சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் தற்போது அரசுக்கு ஹை கோர்ட் யோசனை கொடுத்திருக்கிறது.
தனியார் தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியாக பணிபுரிபவரின் மகள்தான் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக துணை மருத்துவ படிப்பில் சேர்ந்திருந்தார். க்ரிட்டிக்கல் ஹேர் டெக்னாலஜி என்ற படிப்பை படித்துக் கொண்டு இருமுறை நீட் தேர்வு எழுதி உள்ளார். ஒருமுறை 219 மதிப்பெண்ணும், இன்னொரு முறை 250 மதிப்பெண்ணும் எடுத்திருந்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் தமிழக அரசின் உடைய அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் 7.5% இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகளுக்கு வழங்கியிருந்தால் தனக்கு மருத்துவ இடம் கிடைத்திருக்கும் என்றும், தனியார் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் அவர் மனு அழுத்திருந்தார். அந்த மனு மீது அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில் அரசிடம் அளித்த மனுவை பரிசீலித்து மருத்துவ படிப்பில் தனக்கொரு இடத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு தான் நீதிபதி ஆர் சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அரசு அரசு வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் அரசு கூடுதல் வழக்கறிஞர் அபிமன்யு ஆகியோரும் ஆஜராகி, தனியார் பள்ளிகளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய மனுக்களையும், இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்பின்னர் நீதிபதி சுரேஷ் குமார் பிறப்பு உத்தரவில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை இரு நீதிபதி அமர்வு நிராகரித்த நிலையில், மீண்டும் அதே நிவாரணத்தை இங்கு கோர முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே சமயம் அரசு உதவு பெறும் பள்ளிகளுக்கு அரசு தான் நிதி உதவி செய்கிறது என்பதனால், அங்கு படிக்கக்கூடிய மாணவர்களும் வசதியான குடும்பங்களை சார்ந்தவர்கள் அல்ல என்பதனால்,
அவர்களுடைய பொருளாதார – சமூக நிலை என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு போல தான் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதி, 7.5% இட ஒதுக்கிடை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து, அரசு மறு ஆய்வு செய்யலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் கருத்தாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இருந்தாலும் அரசினுடைய கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்றும் அந்த உத்தரவில் விளக்கம் அளித்திருக்கிறார்.