சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி முதல் ஆனந்த் திரையரங்கு வரை மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்படுகிறது.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை அண்ணாசாலையில் பல்வேறு இடங்களில் கடந்த 2012 ஆம் ஆண்டில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக எல்.ஐ.சி முதல் ஆனந்த் திரையரங்கு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இதனால் வாகானத்தில் செல்வோர் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
தற்போது மெட்ரோ ரயில் பாதைகள் பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதனால் சென்ட்ரலில் இருந்து வருபவர்கள் எல் .ஐ.சி அருகே இடது புறமாக திரும்பாமல் ஸ்பென்சர் வழியாக செல்லலாம். ஏழு வருடங்களுக்கு பிறகு எல்.ஐ.சி அருகே இருவழி சாலையாக மாற்றப்படுகிறது. இதனால் வாகனஒட்டிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.