Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

7 மாதத்திற்கு முன் காதல் திருமணம்… கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்… கதறி அழுத தந்தை…!!!

பாபநாசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட 7 மாதக் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாபநாசம் தாலுக்கா இரும்புத்தலை கிராமத்தின் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 21 வயதில் விஜயா என்ற மகள் இருக்கிறார். அவரும் சேர்ந்த மக்கள் அத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரும் 7 மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விஜயா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவர் நேற்று திடீரென மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், விஜயா உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு தனது மகளின்மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி விஜயாவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |