Categories
மாநில செய்திகள்

6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு…..  தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 6 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்தது கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி தமிழகத்தில் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மதிப்பீட்டு தேர்வு நடத்த உத்தரவிட்டு இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  ஜனவரி 5ஆம் தேதி மொழிப்பாடம், ஜனவரி 6 ஆங்கிலம் ,ஜனவரி 7 கணிதம், ஜனவரி 8 விருப்பம் மொழி, ஜனவரி 10 அறிவியல், ஜனவரி 11 சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் , மொழிப்பாடங்கள் மதியம் 2 மணிக்கு தொடங்கி 3.15 வரையும், இதர பாடங்கள் மதியம் 2 மணிக்கு தொடங்கி 3 மணி வரைக்கும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |