தென்காசி அருகே செலவுக்கு பணம் கேட்டு மூதாட்டியை அடித்துக் கொன்ற பேரன் மகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கணவன் மகன் இறந்த நிலையில், தனியாக வாடகை வீட்டில் வசித்து வரும் மும்தாஜ் என்கின்ற 65 வயது பாட்டி அவரது செலவுகளை அவரே இந்த வயதில் வேலைக்கு சென்று பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் வழி பேரனான அப்துல் சலாம் என்பவர் இவரது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து செலவுக்கு பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவது வழக்கம். அதேபோல்,
இவரது மகள் ஆமீனாள் என்பவரும் பணம் கேட்டு துன்புறுத்துவாள். இவ்வாறு இருக்க நேற்று அதிகாலை அப்துல் சலாம் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 6 பேர் சேர்ந்து பாட்டியிடம் செலவுக்கு பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதில் அடி தாங்க முடியாமல் மும்தாஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் அங்கிருந்து ஆறு பேரும் தப்பி செல்ல அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகள் மகன் வழி பேரனான அப்துல் சலாம் மகள் ஆமீனாள் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.