Categories
உலக செய்திகள்

“60 வருடங்களாக இல்லாத அளவிற்கு கனமழை”… பிரபல நாட்டில் 12 பேர் உயிரிழப்பு….!!!!!!!

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பல மாகாணங்களில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹெனான் மாகாணம்  மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. அந்த மாகாணத்தின் தலைநகர் ஜெங்சோவில்  கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரையில் 61.71 சென்டிமீட்டர் மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக சீனாவில் கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிக அளவில் மழை பெய்துள்ளதாக தெரிவித்த வானிலை அதிகாரிகள் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கனமழையின் காரணமாக தெற்கு சீனாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பல நகரங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியிருக்கிறது. மேலும் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக மின்சாரம், தகவல் தொடர்பு போன்றவையும் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.

கன மழை வெள்ளத்தை தொடர்ந்து ஹெனான் உள்ளிட்ட பல மாகாணங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து உள்ளது. இதற்கிடையே இந்த கனமழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்ததாகவும் 1.77 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தென் சீன பகுதிகளில் இன்னும் சில நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Categories

Tech |