Categories
உலக செய்திகள்

“என்னை யாருக்கும் பிடிக்கவில்லை!”.. தந்தை மற்றும் சித்தியால் கொல்லப்பட்ட சிறுவன்.. மனதை நொறுக்கும் வீடியோ..!!

இங்கிலாந்தில், தந்தை மற்றும் சித்தியின் கொடுமையால் இறந்த ஆறு வயது சிறுவனின் இறுதி தருணங்களை காண்பிக்கும் வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் இருக்கும் Solihull என்ற பகுதியில் வசிக்கும் Thomas Hughes என்ற 29 வயது நபரும்,  அவரின் இரண்டாவது மனைவி Emma Tustin-ம், சேர்ந்து Thomas-ன் மகனான Arthur Labinjo-Hughes-என்ற 6 வயது சிறுவனை கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதில், Emma Tustin, சிறுவனின் தலையை பிடித்து சுவற்றில் இடித்து கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் சேர்ந்து சிறுவனை, நீண்ட நாட்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். சிறுவனை அதிக நேரம் நிற்க வைத்து, உண்ணும் உணவிலும், குடிக்கும் பானத்திலும் அதிக உப்பை கலந்துகொடுத்து சாப்பிட வற்புறுத்தியதோடு, அடித்து கொடுமைப்படுத்தி கொன்றுள்ளார்கள். இந்நிலையில், சிறுவன் உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இறுதியாக பேசிய வார்த்தைகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் போடப்பட்டது.

அதில், அச்சிறுவன் தன் போர்வையை தூக்க முடியாமல் சிரமப்படுகிறார். மேலும், காலில் காயம் இருப்பதால் நடக்க முடியாமல் அவதிப்படுவதை காணமுடிகிறது. அச்சிறுவன், “என்னை யாரும் விரும்புவதில்லை” என்று நான்கு தடவை கதறுகிறான். அதன்பின்பு, “எனக்கு யாரும் சாப்பாடு தரப்போவதில்லை” என்று கூறி அழுது கொண்டிருப்பதையும் ஆடியோவாக நீதிபதிகள் கேட்டனர்.

எனினும், Thomas Hughes-Emma Tustin இருவரும், சிறுவனைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதை மறுக்கிறார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |