Categories
தேசிய செய்திகள்

“6 நாட்கள் வங்கிகள் இயங்காது”….. ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு….!!!!

டிசம்பர் மாதம் முடிந்து புத்தாண்டு தொடங்க இன்னும் 10 தினங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்த 10 நாட்களுக்குள் பல்வேறு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். இருப்பினும் ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். ஆகவே நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய திட்டம் இருந்தால், வங்கிகள் இருக்குமா இல்லை விடுமுறையா என்று தெரிந்து கொண்டு செல்வது நன்றாகும்.

இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்னும் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. சில இடங்களில் பிராந்திய அளவில் மட்டுமே விடுமுறை இருக்கும். உதாரணமாக பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 30ஆம் தேதி சில்லாங் பகுதியில் மட்டும் விடுமுறை வரும். ஆனால் இதே பண்டிகைக்காக இமாச்சலப் பிரதேசம் முழுவதிலும் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. ஆகவே பிராந்திய அளவில் மாநில அளவில் வங்கி விடுமுறை மாறுபடும். ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, வங்கி விடுமுறை நாட்களான:

டிசம்பர் 24- கிறிஸ்துமஸ் (Christmas Eve)

டிசம்பர் 25- கிறிஸ்துமஸ்

டிசம்பர் 26- ஞாயிறு

டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

டிசம்பர் 30- யூ கிகாங்  நங்பா

டிசம்பர் 31- புத்தாண்டு தொடக்கம்

எனவே வங்கி விடுமுறை நாட்களை முன்பே தெரிந்துகொண்டு அதன்படி திட்டமிட்டு பணம் பரிவர்த்தனை மேற்கொண்டால மக்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்க முடியும்.

Categories

Tech |