காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் கீர்த்தனா என்ற பெண்ணும் காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் கீர்த்தனா பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ராமச்சந்திரன் சமூகவலைதளத்தில் அதிகமாக ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்து கீர்த்தனா தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் மயங்கிய நிலையில் இருந்த கீர்த்தனாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த திரு.வி.க நகர் காவல் துறையினர் கீர்த்தனாவின் தற்கொலை விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.