Categories
தேசிய செய்திகள்

6 வாலிபர்களை பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பி வைத்த வழக்கு…. பெங்களூரு பல் டாக்டர் கைது…!!!

6 வாலிபர்களை பயங்கரவாத அமைப்பிற்கு அனுப்பி வைத்த பெங்களூருவை சேர்ந்த மருத்துவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் வசித்து வரும் பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை, சிரியாவுக்கு அனுப்பி பயங்கரவாதிகளாக மாற்றும் கும்பலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2013-14 ஆம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த 6 வாலிபர்களை மூளை சலவை செய்து சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த என்.ஐ.ஏ.அதிகாரிகள் இது தொடர்பாக பெங்களூர் திலக் நகரை சேர்ந்த சுகப் சமீர் மற்றும் அரிசி வியாபாரியான பிரேசர் டவுன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் பெங்களூருவில் வசித்து வரும் டாக்டர் முகமது தாஹிர் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தனர். அதையடுத்து பெங்களூருவில் வசித்து வந்த முகமதை நேற்றுமுன்தினம் என்.ஐ.ஏ.அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது,  வாலிபர்களை மூளைச்சலவை செய்து அவர்களை சிரியாவுக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |