Categories
உலக செய்திகள்

6 வருஷத்துக்கு முன் தாத்தா வீட்டுக்கு போனேன்…. அதான் இப்படி இருக்கேன்…. கவுன்சிலிங்கில் வெளியான அதிர்ச்சி…!!

தாத்தா வீட்டுக்கு சென்ற சிறுமியிடம் 68 வயது முதியவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே சிறுமி மன அழுத்தத்தில் இருந்துள்ளதால் சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமியை அவர் படிக்கும் பள்ளியின் மூலமாக உளவியல் நிபுணர்கள் ஆலோசனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதையடுத்து  அந்த ஆலோசனையில், சிறுமி அதிர்ச்சியூட்டும் தகவலை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

அதில், கடந்த 2014ஆம் வருடம் தான் விடுமுறைக்காக தன்னுடைய தாத்தா வீட்டிற்கு சென்றபோது சிறுமியின் உறவினரான 68 வயது முதியவர் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று தவறாக நடந்துள்ளார். இதனால்தான் சிறுமி மன அழுத்தத்திற்கு ஆளாகியதாக கூறியுள்ளார்.

மேலும்  கடந்த ஆறு வருடங்களாக மனரீதியாக சிரமப்பட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு சென்னை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் தவறாக நடந்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் 6 வருடங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

Categories

Tech |