Categories
உலக செய்திகள்

6 கோடி தடுப்பூசிக்கு ஒப்பந்தம் போட்ட பிரிட்டன்…!! ஜி.எஸ்.கே., சனோபி நிறுவனம் வழங்குகிறது…!!

இங்கிலாந்து அரசு ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகிய பிரபல நிறுவனங்களுடன் ஆறுகோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றது.

இங்கிலாந்து அரசு 6 கோடி தடுப்பூசி டோஸ் வழங்குவதற்கு பிரபல மருத்துவ நிறுவனங்களாக இருக்கின்ற ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகியவைகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் மறுசீரமைப்பு புரத அடிப்படையிலான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தடுப்பூசி ஒன்றினை தயாரிக்க உள்ளது. அந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை ஆனது வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அங்கீகாரத்தினை வருகின்ற ஆண்டு கோடை காலத்திற்குள் பெற்றுவிடலாம் என்று இரு மருத்துவ நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன.

இத்தகைய நிலையில் இந்த இரு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது பற்றி இங்கிலாந்து வர்த்தக மந்திரி அலோக் சர்மா கூறும்போது, “ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகிய நிறுவனங்களின் பலவிதமான நம்பிக்கைகளுக்கு உரிய தடுப்பூசிகளின் காரணங்களை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனால் பொதுமக்கள் அனைவரையும் பாதுகாக்கவும், அவர்களின் உயிர்களை காப்பாற்றவும் இயலும்” என கூறியிருக்கின்றார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அரசு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும் மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் இணைந்து தயார் செய்கிற தடுப்பூசியை 10 கோடி டோஸ் வாங்கிக் கொள்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |