டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர் தூத்துக்குடி, 4 கன்னியாகுமரி, 18 நாமக்கல் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்ததையடுத்து மேலப்பாளையம் பகுதி மக்கள் வெளியில் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.