ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த ஒரு வருடத்தில் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளை சேர்ந்த 56 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பிறகு தீவிரவாத அமைப்பு சேர்ந்த 102 உள்ளூர் இளைஞர்களில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்நிலையில் ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் அதன் ஏஜென்சிகளின் ஆதரவாளர்களை முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.