Categories
தேசிய செய்திகள்

5,00,000 பணத்தை… ரெய்டுக்கு பயந்து இடைத்தரகர் செய்த காரியம்… எரிந்து நாசமான பணம்..!!

லஞ்ச ஒழிப்பு துறைக்கு பயந்து தெலுங்கானாவை சேர்ந்த தரகர் ஒருவர் பணத்தை அடுப்பில் வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் பல லட்சக்கணக்கான பணத்தை ஊழல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு பயந்து இடைத்தரகர் ஒருவர் எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலெந்தகுந்தா தண்டா சர்பஞ்ச் ராமுலு என்பவர் வெல்டாண்டா மண்டல் பொல்லம்பள்ளியில் ஒரு ஆலையை நடத்த சுரங்கத் துறையிடம் அனுமதி கோரியிருந்தார். அது தொடர்பாக தாசில்தாரை சந்தித்தபோது கல்வகூர்த்தி நகரில் வசிக்கும் வெங்கடையா கெளட் ராமுலு என்பவரை சந்திக்க பரிந்துரைத்துள்ளார்.

பணிகளை முடிக்க 6 லட்சம் ராமுவிடம் கேட்டுவிட இறுதியாக ஒப்பந்தமாகி 5 லட்சத்தை பெற்றுக் கொண்டார். இதை அடுத்து  ராமுலு இந்த வழக்கை ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவர்களின் ஆலோசனைப்படி இரவில் வீட்டிற்கு சென்று பணத்தை கொடுத்துள்ளார். இந்த திட்டத்தை வடிவமைத்து அலுவலர்கள் அடுத்த சில மணி நேரத்தில் வீட்டிற்கு அதிரடியாக சோதனை நடத்தச் சென்றனர்.

ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்றபோது தான் வாங்கிய பணத்தை அடுப்பின் மேல் வைத்து  எரித்துள்ளார். அப்போது 70% முழுவதும் எரிந்து விட்டது. அதை கைபற்றி ஊழல் தடுப்பு பிரிவு, இவருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |