கனடாவில் லாட்டரி டிக்கெட் வாங்கிய ஒரு இளம்பெண்ணுக்கு பெரிய அளவில் பரிசு கிடைத்துள்ளது அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் (British Columbia) ரிச்மண்ட் நகரை சேர்ந்த இளம் பெண்ணான யான் லி வு (yan li wu) என்பவர் மாலில் (aberdeen centre) சுரண்டும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.. அதில், அவருக்கு ரூபாய் 50,000 பரிசு விழுந்துள்ளது. இதனால் அப்பெண் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.
அதன்பிறகு அவர் கூறுகையில், “மளிகை கடையில் பொருட்கள் வாங்கிய பின்னர் தான் நான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துள்ளதா என பார்த்தேன். ஆம், எனக்கு ரூபாய் 50,000 பரிசு கிடைத்திருக்கிறது, என்னால் நம்பவே முடியவில்லை.
ஆனால் நான் மகிழ்ச்சியை வெளிக்காட்டவில்லை. அதாவது, அங்கேயே கத்தி பெரிதாக்க விரும்பவில்லை. வீட்டுக்கு வந்த பின்னர் அதை குடும்பத்துடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தேன். எனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்திருப்பது சொல்ல முடியாத அளவில் சந்தோஷத்தை கொடுத்துள்ளது” என அவர் கூறினார்.