Categories
உலக செய்திகள்

50 ரஷ்ய ராணுவ படைகள் அழிப்பா….? தகவல் தெரிவித்த உக்ரைன் ராணுவம்….!!!! 

உக்ரைன் நாட்டு இராணுவம் 50 ரஷ்ய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான  போர் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக  நீடித்து வருகின்றது.  இந்நிலையில் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் ரஷ்ய ராணுவ படைகள் வசம் சிக்கியுள்ளன. இதனை அடுத்து உக்ரைன் இராணுவம் 50 ரஷ்ய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு உக்ரைனில் நேற்று நடந்த தாக்குதலில், ரஷ்ய இராணுவத்துக்கு சொந்தமான 3 இராணுவ டாங்கிகள் மற்றும் 11 கவச வாகனங்களை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யா இப்போது கருங்கடலில் 17 கப்பல்களைக் கொண்டுள்ளது. இதில் 2 ஏவுகணை வாகனங்கள் உட்பட 16 கலிப்ர் ஏவுகணைகள் கப்பலில் உள்ளது. ரஷ்ய துருப்புகள் அங்கிருந்து பின்வாங்கும் போது, பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் கட்டிடங்கள் மற்றும் பிற இடங்கள் ஆகியவற்றில் ரஷ்ய இராணுவ படையினர் கண்ணி வெடிகுண்டுகளை வைத்திருப்பார்கள் என்று உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |