Categories
அரசியல் மாநில செய்திகள்

50 ஆண்டு கால தமிழக அரசிடம்… ஒரு தொலை நோக்கு திட்டம் இல்ல… எல்.முருகன் பேட்டி…!!!

மழைக்காலம் வரும்போதெல்லாம் சென்னையின் இந்த நிலையை போக்குவதற்கு தொலைநோக்குடன் கூடிய நிரந்தர தீர்வினை தமிழ்நாடு அரசு கொண்டு வர தயாராக வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூர், தொழிற்பேட்டை, போரூர் மற்றும் தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட மத்திய இணை மந்திரி எல். முருகன் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது: “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. அண்மையில் தமிழக முதல்வரை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று வாக்குறுதி அளித்தார்.

அதனடிப்படையில் மத்திய அரசு தற்போது உதவி செய்து கொண்டிருக்கின்றது. பல ஆண்டுகளாக சென்னையின் நிலை இதேபோன்று நீடித்து வருகிறது. அதற்கு தொலைநோக்குடன் கூடிய நிரந்தர தீர்வினை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.  2015-ம் ஆண்டில் வெள்ளம் ஏற்பட்ட போதிலும், மழைநீர் கடலில் சேர்ந்து இரண்டு மாதத்திலேயே குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது பெய்த மழையும் கூட அதே நிலையில்தான் உள்ளது. மழைநீரை சேமித்து வைத்து பயன்படுத்த நம்மிடம் எந்த திட்டமும் இல்லை. மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க, அந்த நீரை முழுமையாக பயன்படுத்த ஏதுவான திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |