சேலம் மாவட்டத்தில் உள்ள டேனிஷ்பேட்டை உள்கொம்பை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பசு கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த நடராஜன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுவை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
Categories
50 அடி ஆழமுள்ள கிணறு…. உயிருக்கு போராடிய பசுமாடு மீட்பு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!
