ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுத் தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்களின் கல்வி இடைநிற்றல் சதவீதம் அதிகரிப்பதோடு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மதிப்பெண்களை மட்டுமே அல்லாமல் இளம் பருவத்தினரின் வாழ்க்கையை நெறிப்படுத்துவதாக கல்வி இருக்கவேண்டும் என தெரிவித்துள்ள பாரிவேந்தர் பொதுத் தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.