Categories
சினிமா

5 படங்களின் கதை…. வேறுவேறு குரலில் ஒரே பாடல்…. பாடி அசத்திய எஸ்பிபி…..!!!!!

மிக சிறப்பான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்பிபி குரலை மாற்றிப்பாடுவது, மூச்சுவிடாமல் பாடுவது என அனைத்திலும் வல்லவர். அந்த அடிப்படையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதன் காரணமாகவே இவருக்கு பெரும்பாலான ரசிகர்கள் உண்டு. அதுமட்டுமல்லாமல் இவர் கதைக்காக ஒரே படத்தில் 2 வெவ்வேறு குரல்களில் பாடியும் அசத்தி இருக்கிறார். மேலும் அவர் குரலை அடையாளம் காணாத அளவுக்கு மாற்றியும் பாடியுள்ளார். அப்பாடல்கள் என்ன என்பதை குறித்து காண்போம்.

அஞ்சலி

மணிரத்னம் இயக்கத்தில் 3 தேசிய விருதுகளை தட்டிச் தூக்கிய இப்படத்தில் ரகுவரன், ரேவதி, பேபி ஷாமிலி போன்றோர் நடித்து இருப்பார்கள். இந்த படத்தில் ரகுவரன் குழந்தைகளுக்காக கதை கூறும் ஒருஇடத்தில் எஸ்பிபி வித்தியாசமான குரலில் பாடி இருப்பார்.

இந்திரன் சந்திரன்

கமல், விஜயசாந்தி நடிப்பில் தயாரான தெலுங்கு படத்தின் டப்பிங்தான் இந்த திரைப்படம். இதில் கமல் 2 வேடங்களில் நடித்து இருப்பார். அதாவது இந்திரன் மற்றும் சந்திரன் என்ற இரு கேரக்டர்களுக்காகவும், எஸ்பிபி வெவ்வேறு குரலில் பாடயும் அசத்தி இருப்பார். ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு குரலில் வித்தியாசம் காட்டி அவர் பாடி இருப்பது தனித்துவமான சாதனை ஆகும்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி

சிவக்குமார், தீபா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய இத்திரைப்படத்தில் சிவகுமார் செம்பட்டையன் என்ற கேரக்டரில் நடித்து இருப்பார். கிராமத்துக்கதை களத்தை கொண்ட இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. எஸ்பிபி மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான் என்ற பாடலை வித்தியாசமான குரலில் பாடி அசத்தியிருப்பார்.

விக்ரம்

கமல், அம்பிகா, சத்யராஜ், லிசி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய இத்திரைப்படத்தில் ஏன் ஜோடி மஞ்ச குருவி எனும்பாடல் இடம் பெற்றிருக்கும். அப்பாடலில் எஸ்பிபி கமலுக்காக ஒரு குரலிலும், ஜனகராஜுக்காக ஒரு குரலிலும் பாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

வசந்த காலம்

விஜயன், சுமித்ரா, சுருளி ராஜன் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தில் எஸ்பிபி சுருளிராஜனுக்காக ஒரு பாடலை பாடி இருப்பார். திரையுலகில் வித்தியாசமான குரல் வளம் கொண்ட சுருளிராஜனுக்காக எஸ்பிபி பாடிய அப்பாடல் பலரின் பாராட்டையும் பெற்றது.

Categories

Tech |