தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
தமிழகத்தில் கடலோர மாவட்டம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட நிலை நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும்.
ஜனவரி 2 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 30 வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் அதனை ஒட்டிய பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.