Categories
தேசிய செய்திகள்

“5 கோடி ‘கோர்பிவேக்ஸ்’ கொரோனா தடுப்பூசி…” கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு…!!

பயோலஜிகல்-இ நிறுவனத்திடமிருந்து ‘கோர்பிவேக்ஸ்’ தடுப்பூசியை தலா 145 ரூபாய்க்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பயோலஜிகல்-இ நிறுவனம் ‘கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷில்ட் தடுப்பூசிகளுக்கு அடுத்ததாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உள்நாட்டு தடுப்பூசி இதுவாகும். இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த டிசம்பர் மாதம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தது. பயோலஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 5 கோடி தடுப்பூசிகள் தலா ரூ. 145 க்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

‘கோர்பிவேக்ஸ் தடுப்பூசி கொள்முதலுக்கான 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 15 வயதை கடந்தவர்கள் 60 வயதை தாண்டிய இணை நோயாளிகள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த தடுப்பூசி முன்னெச்சரிக்கையாக செலுத்தப்பட உள்ளது. ‘கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை 18 வயதை கடந்த 28 நாட்களுக்கு ஒரு முறை இரண்டு தவணையாக செலுத்த வேண்டும்.

Categories

Tech |