Categories
தேசிய செய்திகள்

5 ஏக்கர் நிலம் இலவசம்….. ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் மாவட்ட தலைநகர் மற்றும் மாநகராட்சிகளில் மருத்துவமனைகள் துவங்க முன் வருபவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய அவர், மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகர் மற்றும் திருப்பதி, விஜயவாடா உள்ளிட்ட மூன்று மாநகராட்சிகள் என மொத்தம் 16 இடங்களில் தலா 30 முதல் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறியுள்ளார்.

மூன்று ஆண்டுக்குள் 100 கோடி ரூபாய் முதலீடு செய்து மருத்துவமனை தொடங்க முன் வருபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என அவர். ஆந்திராவில் சிறந்த மருத்துவமனைகள் இல்லை. இங்குள்ள மக்கள் சிகிச்சைக்காக தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |