இஸ்ரேலில் கொரோனோ பரவலை எதிர்த்து நான்காவது தவணை தடுப்பூசி தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் முதலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு இரண்டாவது பூஸ்டர், அதாவது நான்காம் தவணை தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அங்கு நான்காம் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
அந்தவகையில், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான்காம் தவணை தடுப்பூசி அளிக்க சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. அந்நாட்டில், தற்போது வரை சுமார் 95 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். மேலும், 42 லட்சம் நபர்கள் 3 தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.