Categories
தேசிய செய்திகள்

43 தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

தமிழகத்தில் 43 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது.

2020 – 21ம் ஆண்டிற்கான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அதுகுறித்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகமானது டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவதற்கான காலியிடங்கள் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் 43 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த உத்தரவானது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளது. மேலும் தலைமை செயலத்தில் தமிழக உள்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இதுகுறித்து ஆலோசனை நடத்தி ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

இன்னும் இரண்டு தினங்களில் 43 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு குறித்த பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4 டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு விடுத்திருந்தது. ஆனால் விதிகளின் படி 3 டி.ஜி.பி.க்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டு தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |