Categories
மாநில செய்திகள்

41 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “41 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்திய ஹாக்கியில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் சாதனையால் மொத்த நாடே பெருமை கொள்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |