Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொரோனாவிடமிருந்து தப்பி வந்த கணவர்…. ஏற்க மறுத்த மனைவி…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

கொரோனா தொற்றில் இருந்து வீட்டிற்கு மீண்டு வந்தவர் தனிமையில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இருக்கின்ற பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் துரை என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.இவர் சென்ற 15 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை எடுத்து வருவதற்காக மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் சென்னை சென்று திரும்பியிருக்கிறார். அதன் பின்னர் துரைக்கு சென்ற பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொரோனாவில் இருந்து நீண்டு சென்ற 26ம் தேதியன்று குணமாகி வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவரது மனைவி குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்ற காரணத்தால் மன உளைச்சலில் தனிமையில் இருந்துள்ளார். மனைவியை வீட்டிற்கு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார்.இத்தகைய சூழ்நிலையில் அவர் இன்று வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |