Categories
தேசிய செய்திகள்

40 கி.மீ. முதுகில் குழந்தையை சுமந்தபடி… ஆறு, காடுகளை கடந்து தடுப்பூசி செலுத்த செல்லும் சுகாதார ஊழியர்…!!!

கிராமத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 40 கிலோமீட்டர் ஆறு காடுகளைக் கடந்து குழந்தையுடன் சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருகிறார் சுகாதார ஊழியர் மந்திரிகுமாரி.

ஜார்கண்ட் மாநிலம் சுகாதார துறை மையத்தில் பணியாற்றி வரும் மந்திரிகுமாரி என்பவர் அருகில் உள்ள எட்டு கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் தான் அந்த கிராமத்தை அடைய முடியும். இவர் தனது முதுகில் தனது குழந்தையை சுமந்து கொண்டு, தோளில் தடுப்பூசி பெட்டியை சுமந்து ஆற்றைக்கடந்து இந்த பணியை செய்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “இது எனக்கு ஒன்றும் புதிதல்ல. நான் எப்போதும் இதுபோன்றுதான் வந்து செல்வேன். பிரசவ கால விடுமுறை முடிந்து மூன்று மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தேன். மழைக்காலம் வந்தால் இந்த ஆற்றை கடக்க முடியாது. எனவே அதற்கு முன்பாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று இப்படி சென்று தடுப்பூசி போட்டு வருகிறேன் என அவர் கூறினார். ஒரு நாளைக்கு ஆறு ,காடு என 40 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டியுள்ளது” என அவர் வருத்தமுடன் தெரிவித்தார்.

Categories

Tech |