Categories
தேசிய செய்திகள்

OMG: 4-வது மாடியிலிருந்து குதித்த மாணவி…. நடந்தது என்ன?…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

டெல்லியின் முகர்ஜி நாகர் பகுதியில் வசித்து வரக்கூடிய கல்லூரி மாணவிக்கு, டேட்டிங் ஆப் வாயிலாக ஒரு இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இந்த நிலையில் தன் வீட்டிற்கு வருமாறு கல்லூரி மாணவியிடம் இளைஞர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி கல்லூரி மாணவி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும், மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவியை இளைஞர்களின் நண்பர்கள் பாலியல் வன் கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் கற்பை காப்பாற்ற 4வது மாடியிலிருந்து மாணவி கீழே குதித்துள்ளார். அதன்பின் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து இளைஞர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |