Categories
தேசிய செய்திகள்

”4 ரபேல் போர் விமானம் ஒப்படைப்பு” பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத்சிங்…!!

செப்டம்பர் 2_ஆம் தேதி முதல் கட்டமாக 4 ரபேல் போர் விமானத்தை பிரான்ஸ் இந்தியாவிடம் ஒப்படைக்கின்றது.

கடந்த 2012_ஆம் ஆண்டு இந்திய அரசு பிரான்சிடம் ரபேல் போர் விமானத்துக்கான ஒப்பந்தம் போட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவுக்கு பிரான்ஸ் 36  ரபேல் போர் விமானத்தை வழங்குகின்றது. அதில் முதல் கட்டமாக 4 விமானங்களை வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி ஒப்படைக்கின்றன.இதற்காக பிரான்ஸ் நாட்டிற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்ல இருக்கின்றார்.அங்கே இதற்காக ஒரு விழா நடத்தி அந்த விழாவிலேமுதல் 4 விமானங்கள் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

Image result for ரபேல் போர் விமானம்

இந்த விழாவின்போது இந்திய விமானப்படையின்  தலைவர் கலந்து கொள்வார் என தெரிகிறது. பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களும் , ரபேல் போர் விமான பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் விமானிகளும் அங்கே செல்வார்கள் என தெரிகிறது. 2020 ஆம் ஆண்டு முதல் இந்த விமானத்தை இந்தியா பயன்படுத்த இருக்கின்றது. இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரபேல் விமானம் இந்தியாவுக்கு வர இருப்பதால் இந்திய விமானப்படையின் பலம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

Categories

Tech |