Categories
தூத்துக்குடி

சமுதாய நலக்கூடத்தில் என்ன வேலை….? நோட்டமிட்ட காவல்துறையினர்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்பாகம் காவல்துறையினர் போல்டன்புரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் அங்கு உள்ள சமுதாய நலக்கூடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக திலீப்குமார், மாரிமுத்து, ராஜ், சத்யா ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 3000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |