மத்திய அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.கொரோனா குறித்து தினமும் ஐந்து அமைச்சர்களின் இணைச் செயலாளர்கள் விளக்கம் தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அந்தவகையில் சுகாதாரம் , வெளியுறவு , விமான போக்குவரத்து , நிதி , வணிகத்துறை இணை செயலாளர்கள் தினமும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுப்பார்கள்.அதே போல மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 % உயர்த்த மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல் வழகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை விளக்க மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் , பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்திக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.