Categories
மாநில செய்திகள்

“4 மாவட்டங்களில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்”… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் கடந்த 28/7/2022 முதல் 10.8. 2022 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்கும் இடவசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள் அமைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியா தீபம் போன்றவை பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் போன்ற மாவட்டங்களுக்கு 28/7/2022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இந்த விடுமுறையை ஈடு கட்டும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அரசு தகவல் வெளியிட்டு இருக்கிறது.

Categories

Tech |