மதுபான கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தல் வருகிற 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதுபான கடைகளை திறக்கக்கூடாது என அறிவித்துள்ளார்.
இந்த கடைகளை ஜூலை 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும், ஜூலை 12-ம் தேதி காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையும் மூட வேண்டும். மேலும் இந்த உத்தரவை மீது கடைகளை திறப்பவர்கள் மற்றும் மறைமுகமாக விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.