Categories
தேசிய செய்திகள்

4 அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்தது….. நொடியில் தப்பிய உயிர்கள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

மகராஷ்டிரா தலைநகர் மும்பை குர்லா பகுதியில் உள்ள நாயக் நகரில் நான்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென நேற்று இரவு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் முதல் கட்டமாக இடிபாடுகளில் இருந்து 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 20 முதல் 25 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து அறிந்த மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்யா தாக்கரே சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு அடுக்கு மாடி கட்டிடத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் மக்கள் தொடர்ந்து அங்கு வசித்து வந்தனர். அனைவரையும் மீட்பதே எங்கள் முன்னுரிமை. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மக்கள் சிரமப்படாமல் இருக்க காலையில் இந்த கட்டிடங்கள் காலி செய்வது குறித்து ஆய்வு செய்வோம். மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பும் போதே அபாய நிலையில் உள்ள கட்டிடங்களை பொதுமக்கள் தாங்களாகவே காலி செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடப்பது துரதிஷ்டவசமானது. மும்பையில் இடிந்து விழும் தருவாயில் உள்ள கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது இப்போது மிக முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |