Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறை கைதிகள் 37 பேர் குணமடைந்தனர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறை கைதிகள் 37 பேர் குணமடைந்து டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனினும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 798 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 18,325 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.49% பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் சிறைக்கைதிகள் 37 பேர் குணமடைந்துள்ளனர்.

புழல் சிறையில் 28 பேர், கடலூர் – 4 பேர், பாளையங்கோட்டை – 2 பேர், திருச்சி – 1 உட்பட 37 கைதிகள் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. புழல் சிறையில் இதுவரை மொத்தம் 30 கைதிகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் ஒரு தூய்மை பணியாளர், மற்றும் 4 சிறை காவலர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 28 பேர் குணமடைந்துள்ளதால் தற்போது 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |