தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,406 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,37,841பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 11,121 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரிசோதனையை குறைத்து விடுவதாக வெளியான தகவல் தவறானது, மூச்சு திணறலோடு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது என கூறியுள்ளார்.