தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3,552 பணியிடங்களுக்கான நேரடி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாம் நிலை காவலர்,சிறை காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று (ஜூன் 7) முதல் இணைய வழி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவலர் தேர்வில் முதல் முறையாக பொது தேர்வுடன் சேர்த்து தமிழ் மொழி தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு சீருடை தேர்வு குழுமம் அலுவலகத்திலும் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகமுள்ள நபர்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறை எண்கள்: 044- 40016200, 044-28413658, 9499008445, 9176243899, 978903725ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.