தமிழகத்தில் 300 நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் சிரித்த முகத்துடன் வரவேற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்தது.
அதனால் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 90 சதவீதம் பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால் இன்று முதல் தமிழகம் முழுவதிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பள்ளிகள் வரத் தொடங்கியுள்ளனர். 300 நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் சிரித்த முகத்துடன் வரவேற்கின்றனர். மாணவர்களுக்கு வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. முக கவசம் அணிந்த மாணவர்கள், சமூக இடைவெளியுடன் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.