முதியவரை தாக்கியதை பார்த்து தட்டிக்கேட்ட வாலிபரின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் சேர்ந்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிக் கொண்டிருந்ததை யுவராஜ் பார்த்துள்ளார். இதனை அடுத்து அந்த முதியவரை ஏன் தாக்குகிறார்கள் என்று அந்த மூன்று பேரிடம் யுவராஜ் கேட்டபோது, அவர்கள் கோபத்தில் யுவராஜை தாக்கியதோடு, அவரது மோட்டார் சைக்கிளை எரித்துவிட்டனர்.
இதுகுறித்து யுவராஜ் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெரிய காலனி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் சூர்யா, ராஜேஷ், மதன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.