அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரில் பயிற்சி நடந்த சமயத்தில் திடீரென்று விபத்து ஏற்பட்டு தலீபான்கள் மூவர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் தலீபான்கள் கைப்பற்றிவிட்டார்கள். அதன் பிறகு அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களையும் ஹெலிகாப்டர்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள். மேலும், அவர்களுக்கென்று தனியாக பாதுகாப்பு படைகளும் அமைத்துக் கொண்டனர்.
அந்த பாதுகாப்பு படையில் அமெரிக்க நாட்டின் ராணுவ ஆயுதங்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பிளாக் வாக் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் பாதுகாப்பு படை பயிற்சி மேற்கொண்டது. அந்நாட்டின் தலைநகரில் நடைபெற்ற இந்த பயிற்சியில் திடீரென்று ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.