Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எப்போதும்வென்றான் பகுதியில் வசிக்கும் அப்பணசாமி, குளத்தூர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தனர். இதனால் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று குமாரபுரம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக திருச்செந்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 3 போரையும் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Categories

Tech |