நாடு முழுவதும் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நம் நாட்டில் கோவிஷூல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் குழந்தை தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அதை அவர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
இதையடுத்து 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, ஜைடஸ் கடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும்கூட, 12 வயதுக்கு கீழான சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு இந்தியாவில் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்தநிலையில், இந்தியாவில் இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போடும் வகையிலான கொரோனா தடுப்பூசி (கோவேவக்ஸ்) தயாராகும் என்று சீஎரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார். மேலும், தற்போது உள்ள பரிசோதனையில் இருக்கின்ற இந்த தடுப்பூசி நல்ல செயல்திறன் மிக்கது என்று அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.