மராட்டியத்தில் 3 மீட்டர் சுற்றளவு கொண்ட வளையம் மற்றும் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநிலம் சந்திராபூர் என்ற நகரில் சிந்தேவாஹி கிராமத்தில் நேற்று இரவு, 3மீட்டர் சுற்றளவு கொண்ட வளையம் இருப்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இதுபற்றி சிந்தேவாஹியின் தாசில்தார் கணேஷ் ஜக்டேல் கூறுகையில், அந்த வளையம் மிகவும் சூடாக இருந்துள்ளது எனவும் மேலும் வானத்திலிருந்து விழுந்தது போல் தோன்றியது என கூறியுள்ளார். இதேபோல் இன்று காலையில் மற்றொரு கிராமத்தில், கோள வடிவிலான மற்றொரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நாக்பூர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வானத்தில் இருந்து விண்கற்கள் மழை பொழிந்தது போன்ற காட்சிகள் வீடியோவுடன் வெளிவந்துள்ளது. இதனால் மர்ம பொருட்கள் கிராமத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Maharashtra: In what appears to be a meteor shower was witnessed over the skies of Nagpur & several other parts of the state. pic.twitter.com/kPUfL9P18R
— ANI (@ANI) April 2, 2022